10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குடி பகுதியை சேர்ந்தவர் குமார்.இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 10 வயது  சிறுமியை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பு திரண்டுள்ளனர்.இதை அறிந்த குமார் தப்பி ஒளிந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து உள்ளே வந்த அக்கம்பக்கத்தினர் மாணவி மீட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மறைந்திருந்த குமாரை பிடித்து,பின்பு போஸ்கோ சட்டத்தின் படி கைது செய்துள்ளனர்.இதன் பின்பு குமாருக்கு உமா என்ற  மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குமார் கைது செய்யப்பட்டது அறிந்த உமா,தனது கணவன் குமார் தன்னை கொலை செய்ய முயன்றததால் தான் தன் தாய் வீட்டிற்கு வந்ததாகவும் இந்த மாதிரி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயல்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.