டெக்சாஸ் மாகாணத்தில் அகதிகள் சிற்றுந்து விபத்து-10 பேர் பலி..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அகதிகள் சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் சிற்றுந்து ஒன்று என்சினோ என்ற பகுதியில் அளவுக்கு அதிகமாக 29 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அன்று நடந்த இந்த சம்பவத்தில் ஓட்டுநர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து கூறிய அதிகாரிகள் 15 பேர் செல்லக்கூடிய சிற்றுந்தில் 29 பேர் சென்றதும் அதுவும் ஓட்டுநர் வேகமாக வளைவுகளில் ஓடியதும் இந்த விபத்துக்கு காரணங்கள் என்று தெரிவித்துள்ளனர்.