பூட்டிய தனி அறையில் 10 நாட்கள்…., 13 பேய் படங்கள் பார்ப்பவருக்கு சுமார் 1 லட்சம் பரிசு…!

பூட்டப்பட்ட தனி அறையில் இருந்து 10 நாட்களில் 13 பேய் படம் பார்ப்பவருக்கு 95,000 ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என அமெரிக்க ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளியாகிய திகில் திரைப்படம் தான் மாயா. இந்த திரைப்படம் இயக்குனர் அஸ்வின் சரவணன் அவர்களால் இயற்றப்பட்டது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அந்த படத்தில் இறுதிக் கட்டத்தில் பணத்திற்க்காக ஒரு பேய் படம் பார்ப்பதற்காக சென்றிருப்பார்.

அதே போல தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஒரு பைனான்ஸ் நிறுவனம் ஒன்று பத்து நாட்களில் பூட்டப்பட்ட தனியறையில் அமர்ந்து 13 பேய் படங்கள் பார்ப்பதற்கு இந்திய மதிப்பில் 95 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த போட்டியை நடத்தும் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய பைனான்ஸ் நிறுவனம் இந்த போட்டிக்கு ஹாரர் மூவி ஹாட் ரேஷனலிஸ்ட் என்று பெயர் வைத்துள்ளது.

அதன்படி இந்த படத்தை பார்க்க கூடிய நபர்களுக்கு அதிக அளவில் அச்சத்தை ஏற்படுத்த கூடிய பயங்கரமான 13 பேய் படங்கள் தேர்வு செய்யப்பட்டு, பார்க்க வைக்கப்படும். கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளர் தனியாக ஒரு அறையில் அமர்ந்து இந்த படத்தை தொடர்ச்சியாக 10 நாட்களுக்குள் பார்த்து முடிக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது அந்த நபரது உடலில் ஃபிட்பிட் எனும் இதயத்துடிப்பை கண்காணிக்கும் இயந்திரம் பொறுத்தப்படுமாம்.

இந்த போட்டி எதற்காக வைக்கப்படுகிறது? என உங்களுக்குள் கேள்வி உருவாகலாம். இதற்காக அந்தநிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட கூடிய பேய் படங்கள் மற்றும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கூடிய பேய் படங்கள் இவை இரண்டிலும், எந்த மாதிரியான படங்கள் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தான் இந்த போட்டி நடத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

மேலும், இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் அமெரிக்கர்களாக இருப்பதுடன், 18 வயது பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 படங்களையும் பத்து நாட்களில் பார்த்து முடிப்பவர்களுக்கு, 1300 டாலர் பரிசுத் தொகையாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

2 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

4 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

4 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

4 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

5 hours ago

அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…

5 hours ago