Kerala lottery :10 கோடி இங்க இருக்கு ! யாருப்பா வின்னர் கேரளா லாட்டரியில் சுவாரசியம்

திருவனந்தபுரத்தில் உள்ள சைதன்யா லக்கி சென்டரில் விற்பனை செய்யப்பட்ட HB 727990 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதுகேரள அரசின் விஷூ பம்பர் 10 கோடி பரிசு தொகைக்கான  லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலி இன்னும் லாட்டரி சீட்டை கொண்டுவராதது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட்டை விற்ற முகவர், அதிர்ஷ்ட குலுக்கல்லுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு டிக்கெட் வாங்கப்பட்டதாகக் கூறினார். டிக்கெட் வாங்கியதற்காக திர்ஹாம் கொடுத்த இளைஞர் முதல் பரிசை வென்றிருப்பாரா என்று அந்த முகவர் கருதுவதாக தெரிவித்தார்.

மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜசீந்தா மற்றும் ரங்கன் என்ற தம்பதியினர் இங்கிருந்து லாட்டரி சீட்டு மூட்டைகளை விற்பனைக்கு வாங்கியுள்ளனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கியவர் வெற்றியாளராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.அவர் டிக்கெட்டை  திர்ஹாம் கொடுத்து வாங்கியுள்ளார்.

லாட்டரி வெற்றியாளரால் அதிர்ஷ்ட குலுக்கல் முடிந்து 30 நாட்களுக்குள் லாட்டரி சீட்டை வழங்க முடியவில்லை என்றால், வெற்றியாளர் அதற்கான காரணத்தை லாட்டரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.ஒரு மாதத்திற்குள் யாரும் டிக்கெட் எடுக்கவில்லை என்றால், 6 கோடியே 16 லட்சம் ரூபாய் அரசின் கருவூலத்துக்குத் திரும்ப ஒப்படைக்கப்படும்.

author avatar
Castro Murugan

Leave a Comment