இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!

இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூர் அருகே உள்ள புளிகரை வயல்பகுதியில், ஏஞ்சல் என்பவருக்கு சொந்தமான வயல்பகுதியில், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வயலில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்த தொழிலாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில்  இடத்திற்கு, பற்காம்புப்பிடிக்கும் பயிற்சி பெற்ற, வனத்துறை பணியாளர் செல்வராஜுடன் வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து, சின்னார் வனப்பகுதியில் விட்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.