ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் …!நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
அதிகரித்து வரும் சாலை விபத்து மரணங்களை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் நீதிமன்ற உத்தரவுகளையும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயநீதிமன்ற  நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.
Image result for உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
இந்நிலையில் டிராபிக் ராமசாமி ஹெல்மெட் அணியாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்றது  தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,  ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் டிசம்பர்  17 ஆம் தேதிக்குள் பதில்தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

Leave a Comment