ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பை ஒட்டு கேட்க சொன்ன கங்கனா ரனாவத்?

தானே குற்றப்பிரிவு போலீசார், நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்ற புகாரில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு  சம்மன் அனுப்பி உள்ளனர்.

Related image

முக்கிய பிரமுகர்களின் செல்போன் அழைப்பு விவரங்களை தனியார் துப்பறிவாளர்கள் மூலம் முறைகேடாகப் பெற்ற வழக்கில், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுவிக்கப்பட்டார். விசாரணையில் இவர் அளித்த தகவலில் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களைக் கேட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.

இதை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் மற்றும் இதே புகாரில் சிக்கியுள்ள மாடல் அழகி ஆயிசா ஷெராஃப்புக்கும் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment