ஹர்திக் பாண்டியா அதிரடி: பெங்களூருக்கு 188 ரன் இலக்கு!

  • பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 157 ரன்கள் குவித்துள்ளது

பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி மும்பை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதனடிப்படையில் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார் .குயின்டன் டி காக் 20 பந்துகளுக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 48 ரன் விளாசினார்.

அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 38 ரன்களும் யுவராஜ் சிங் 23 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் 188 ரன் என்ற இலக்குடன் ஆடத் தொடங்கும்.

author avatar
Srimahath

Leave a Comment