'' ஹனுமன் ஒரு தலித் '' முதல்வர் மீது வழக்கு…..நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…!!

ஹனுமனை தலித் என்று கூறிய விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘ஹனுமன் வனவாசி என்றும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்’ எனவும் கூறினார். அவரது பேச்சுக்கு அப்போதே கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது 295, 295 (a) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்டு ஜெய்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment