ஷிரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலகலம்..!குவிந்த பக்தர்.. நிறைவான தரிசனம்

  • சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
  • காவிரி ஆற்றில் இருந்து 1,008 குடங்களில் எடுத்துவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள  சமயபுரம் அருகே கட்டப்பட்டு உள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அக்கரைப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக வடமாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலை போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன்ர் சுமா 20 ஏக்கர் பரப்பளவில் 60 ஆயிரம் அடி சதுர அடியில் ரூ.30 கோடி  மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.கட்டிடப்பணிகள் நிறைவடைந்த நிலையில்  கும்பாபிஷேக விழா கடந்த 17 ம் தேதி தொடங்கியது.அவ்வாறே 1,008 குடங்களால் காவிரி ஆற்றில் இருந்து  எடுத்துவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.நேற்று  காலை அனைத்து கோபுரங்களுக்கும் இப்புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான சாய்பாபா பக்தர்கள் மற்றும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ,மக்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்தனர்.

author avatar
kavitha