வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி அளிக்கும் : பிரதமர் மோடி ..!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி அளிக்கும் : பிரதமர் மோடி ..!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 4-வது நிர்வாக குழு கூட்டம் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், யூனியன் பிரதேச கவர்னர்கள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துதல், ஆயுஷ்மன் பாரத், தேசிய ஊட்டச்சத்து திட்டம், இந்திரா தனுஷ் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்நிலையில் நிதி ஆயோக் மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் மாநில முதல்வர்கள் முன்னிலையில் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்நிலையில் கனமழை காரணமாக வெள்ளம் பாதித்துள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி அளிக்கும் என மோடி உறுதியளித்துள்ளார்.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *