அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வாங்கிய சொத்து விவரங்கள் குறித்து வருமான வரி கணக்குகளை காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது . இந்நிலையில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம் அளித்த நிலையிலும், கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் மனு அளித்தனர் . மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இன்று ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
அதன்படி, ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .