வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுவர பேச்சுவார்த்தை..!

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுவர பேச்சுவார்த்தை..!

காஞ்சிபுரத்தில் இருந்து திருடி கடத்தப்பட்டு ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சோமாஸ்கந்தர் சிலை உள்ளிட்ட தொன்மைவாய்ந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வர ஆஸ்திரேலிய தூதருடன் பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டுள்ளது.

தமிழக கோவில்களில் இருந்து திருடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டு வர சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் மூலம் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து சிதிலம் அடைந்து விட்டதாகக் கூறி, திருடிக் கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமை ஸ்தபதி முத்தையா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *