கடந்த 2015ம் ஆண்டு டி.எஸ்.பி யாக இருந்த விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வலக்கை விசாரித்த சிபிஐ இவர் தனிப்பட்ட காரணங்களால் தான் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என வழக்கை கைவிட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த விஷ்ணுபிரியாவின் தந்தை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும்,மீண்டும் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து நீதிபதி நாகராஜன் வழக்கு விசாரணையை 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.