விராலிமலை ஆற்றில் மணல் கொள்ளை : திருச்சியில் பிடிபட்டனர்.

திருச்சி : விராலிமலை ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு செல்லும் வழியில் போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர். நேற்று திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கைகாட்டி அருகே உள்ள சொரியம்பட்டி  விளக்கில் வளநாடு போலீசார்  வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்த போது இது கண்டுபிடிக்கபட்டது. அந்த வண்டியை மடக்கி பிடித்து விசாரித்ததில் இன்னொரு டிப்பர் லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.பின்னர் அதனையும் அந்த பகுதி போலீசார் மடக்கி பிடித்தனர்.

கைகாட்டி அருகே பிடிபட்ட லாரி  டிரைவர் மதுரை மேலூர் அருகே உள்ள ஒட்டகோவில்பட்டியைச் சேர்ந்த விஜயராஜ் (34). கிளீனர் அன்பரசு ( 24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மதுரை செல்லும்  வழியில் பிடிபட்ட டிப்பர் லாரி   டிரைவர்கள் விராலிமலையைச் சேர்ந்த முருகேசன் (30), சேகர் (45) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment