விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணிரத்னம்…!!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு அடுத்து மணிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் பல பிரபலங்களுள் விஜய் சேதுபதிக்கு மட்டும் அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது.மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, சிம்பு, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment