விசில் அடிக்கத் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் விசில் ஆப் !

கமல்ஹாசன் , மக்கள் நீதி மய்யத்தின் விசில் ஆப் பரீட்சை நேரத்தில் செயல்படத் தேவையான வீட்டுப்பாடமாக தங்களுக்கு இருக்கும் என தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மய்யம் விசில் ஆப்-ஐ அறிமுகப்படுத்தி உரையாற்றிய அவர், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் படம்பிடித்து மக்கள் அனுப்ப இந்த ஆப் உதவும் என்று குறிப்பிட்டார்.

இது மந்திரக் கோலோ அல்லது அரசாங்கம், காவல்துறை உள்ளிட்டவற்றுக்கு மாற்றோ அல்ல என்றும் விளக்கமளித்தார். திருவள்ளூர் மாவட்டம் அதியத்தூர் கிராமத்தைத் தத்தெடுத்த பெற்றோராக மே 1-ம் தேதி அங்கு சென்று அனுமதியிருந்தால் கிராம சபையில் தான் பங்கேற்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment