வாழவைக்கும் வாழைக்கனி

முக்கனிகளில் முதன்மையானது வழைக்கனி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழைப்பழத்தை விரும்பி உண்பர் . இப்பழம் அருகாமையில் உள்ள கடைகளில் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்று. இது போசாக்கு மிக்க உணவாக செயல்படுவதுடன் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வாழைப்பழமானது வருடம் முழுவதும் கிடைக்க கூடிய பழம் ஆகும்.

குழந்தைகளின் உணவிலும் வாழைப்பழம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. குழந்தை பிறந்து ஆறுமாதத்திலிருந்தே குழந்தைக்கு வாழைப்பழம் கொடுத்து வரலாம். இதில் மூளை வளர்ச்சிக்கு உதவும் செரற்றோனின் என்ற சத்து உள்ளது. இலகுவில் வழுக்கி தொண்டை வழியாக இரைப்பைக்கு மிக எளிதாக செல்ல கூடியது . இதனால் இதனை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பழவகைகளில் இது முதண்மையானதா திகழ்கிறது.
வாழைப்பழத்தில் கதலிப்பழம், இதரைப்பழம் , கப்பல் பழம், யானைப்பழம் , செவ்வாழை, மருத்துவை வாழைப்பழம் என பல வகையான வாழைப்பழங்கள் உண்டு. இதில் செவ்வாழை மலட்டுத்தன்மையை போக்கவேள்ளது. சில தம்பதிகளின் எவ்வித குறைபாடுகளுக் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கும் போது இல்லாதிருந்தால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் இல்லாதிருப்பதை காண்கிறோம். அவர்கள் செவ்வாழை பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கருவுட்பத்தி ஏற்படுவதற்கான வாய்ப்பைப் பெறுவார். இது அனுபவ ரீதியாக கண்டறியப்பட்ட உண்மையாகும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment