வரலாற்றில் இன்று டிச 26 உலகமே அதிர்ச்சியில் உறைந்து போன நாள்…
வரலாற்றில் இன்று டிச 26 உலகமே அதிர்ச்சியில் உறைந்து போன நாள்…
வரலாற்றில் இன்று – 2004 டிசம்பர் 26 உலகமே அதிர்ச்சியில் உறைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.
சுனாமி என அழைக்கப்படும் இந்த பேரலைகளின் தாக்குதலில் உலகம் முழுவதும் 2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலை. 12ஆண்டு கடந்த நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நினைவு தினம் இன்று. இந்தியாவில் இன்னாள் தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது !