வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்கள் தாமதம் !

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடுபனி நிலவுகிறது. இதனால் மக்கள் மட்டுமன்றி நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பனியிலிருந்து ஆடுகளைக் காப்பாற்ற அவற்றுக்கு ஆடை அணிவித்துள்ளனர்.
டெல்லியில் குறைந்த பட்சமாக 7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவுகிறாது அடர்த்தியான பனியால் பாதை தெரியாததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றன. 45 ரயில்கள் தாமதமான நிலையில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விமானங்களும் தாமதமாகி வருகின்றன.
source: dinasuvadu.com

Leave a Comment