ரோகித் சர்மாவிடம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்ட தினேஷ் கார்த்திக்!ஆமா அவங்க இருக்கணும்..! கலங்கிய ரோகித் ..!

இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடைசி இருபது ஓவர் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தின் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பேட் செய்த இங்கிலாந்து அணி ஜெய்சன் ராய், மற்றும் ஜோஸ் பட்லர், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் இந்திய அணி பேட்டிங் செய்தது .

பின்னர் இந்திய அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

பின்னர் போட்டி முடிந்தவுடன் தினேஷ் கார்த்திக் அதிரடி தொடக்க வீரர் ரோகித் சர்மாவிடம் சில கேள்விகளை கேட்டார்.அதில் குறிப்பாக ரோகித்  மனைவி குறித்து கேள்வி கேட்டார்.

நீங்கள் உங்கள் மனைவி இருந்தால்தான் அதிரடியாக விளையாடுவீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்,ஆனால் இந்த முறை அவர் இல்லாமல் நீங்கள் எப்படி சிறப்பாக விளையாடினீர்கள் என்று தினேஷ் கேட்டார்.

அதற்கு ரோகித்,ஆமாம் என் மனைவி இல்லாதது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது.அவர் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கலங்கிய படி ரோகித் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment