ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்முகாஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி முறிந்த சிறிது நேரத்திலேயே ராணுவத்தினர் தொடுத்த அதிரடித் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் தாக்குதல் தொடுத்தனர். தீவிரவாதிகளும் பதிலுக்கு சுட்டதில் அங்கு கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் துணை ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மூவரில் ஜெய்சே முகமது இயக்கத்தின் முக்கியத் தளபதியான குவாசிம் என்பவனும் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்னர்.

மேலும் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களுடன் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த திங்கட்கிழமை நான்கு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment