ராஜீவ் காந்தியை போல் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித் திட்டம்!

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்கள் சதி என சந்தேகம் இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு,மகாராஷ்ட்ர போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி போன்ற நிகழ்வு என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்  மாவோயிஸ்ட்கள் 5 பேரை கைது செய்த நிலையில் அவர்களுக்கு வந்த கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படும் ரோனா ஜேக்கப் என்பவரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட ரோனாப்பிடம் இருந்து மகாராஷ்டிரா போலீஸ் ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment