ராஜஸ்தான், தெலங்கானா இரு மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்..!!அடுத்து யார் ஆட்சியாளர்கள்..!!

ராஜஸ்தான்  மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
ராஜஸ்தான்  மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலானது வரும் 7 ஆம் தேதி  நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரு மாநிலங்களிலும் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இறுதி நாளான இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டனர்.தெலங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர்  தீவிர பிரச்சாரம் செய்தனர்.
மேலும் ராஜஸ்தானில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கிடையே 130 தொகுதிகளில் நேரடியாக பலப்பரிட்சை நடத்த உள்ளது.இன்று மாலையுடன் அங்கும் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதால் பிரதமர் மோடி ராஜஸ்தானில் தவுசா (Dausa) நகரில் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேடையில் வைத்திருந்த முரசை அடித்து அங்கு வந்திருந்த கூட்டத்தினரைக் கவர்ந்தார்.இந்நியையில் இரண்டு மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
author avatar
kavitha

Leave a Comment