ரஜினிகாந்த் அவர்களுக்கு அரசு சார்பில் மிக்க நன்றி ..!பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு சார்பில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதாக கூறிய ரஜினிக்கு  நன்றி என்று  பள்ளிகல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் கூறுகையில், வேலைவாய்ப்பை பெறும் வகையில் 12-ம் வகுப்பு முடித்தவுடன்  சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். ஐஏஎஸ்  (IAS) அகாடமிகள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . சி.ஏ முடிப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் கொண்டு வரப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment