“யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை” குட்கா வழக்கு குறித்து மத்திய அமைச்சர் பேட்டி..!!

சென்னை :

குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.  நாகர்கோவில் அருகே முக்கடல் அணையை பார்வையிட்ட பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.அப்போது, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்று கூறிய அவர், மத்திய அரசு மட்டுமே நினைத்து பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை குறைக்க முடியாது என்றும் மாநில அரசும் குறைக்க முடியும், நாட்டின் வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment