மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு …!

வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் ரூ. 25 000 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கைது செய்யப்பட்டனர்.அதேபோல் மோட்டர் வாகன ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்தனர். வாகனத் தகுதிச் சான்று பெற முத்துகுமாரிடம் ரூ. 25000 லஞ்சம் பெற்றபோது மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு  மற்றும் ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமர் சிக்கினார்கள்.

இந்நிலையில்  மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் 45 வங்கி கணக்குகளையும், 6 லாக்கர்களையும் முடக்கும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment