இந்தியாவில் மவுனச்சாமியார்..!!அன்னிய மண்ணில் அதிக பேச்சு..!!மோடி மீது சிவசேனா தாக்கு..!!

உள்நாட்டு விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி அன்னிய மண்ணில் பேசி வருவதாகவும், லண்டனில் இருந்து அவர், வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாகவும், சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து, கட்சி இதழான சாம்னாவில், அதன் தலைவர் உத்தவ் தாக்ரே எழுதியுள்ள தலையங்கத்தில், சிறுமி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட உள்நாட்டு விவகாரங்களை அன்னிய மண்ணில் மோடி பேசியிருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வராமல், அவருக்கு பாதுகாப்பாக இருந்து, வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்விஷயத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரையை மோடி பின்பற்ற வேண்டும் என்றும் இந்தியாவில் மவுனச்சாமியாராக மாறும் மோடி, வெளிநாடுகளில் அதிகம் பேசி வருவதாகவும், சிவசேனா சாடியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment