மோடியை புகழாமல் மேற்குவங்க லேடியை புகழ்ந்த பாஜக தலைவர்…!!!! அதிர்ச்சியில் பாஜக வட்டாரங்கள்….!!!!

மேற்குவங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக முடியுமானால்  அது மம்தா பானர்ஜி மட்டுமே’ என மேற்குவங்க பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நிறைய மோதல்கள் இருந்து வருகிறது. முன்னதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் பேரணை நடத்த மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்தார்.டிஹனால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசியிருப்பது தேசிய அளவில் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மேற்கு வங்கத்தில் இருந்து பிரனாப் முகர்ஜி குடியரசுத்தலைவராகப் பதவிவகித்துவிட்டார்.இதேபோல இந்த  மாநிலத்தில் இருந்து ஜோதி பாசுவை பிரதமராக்கவேண்டும் என நாங்கள் முயற்சி செய்தோம் ஆனால் அதற்கு அவரின் கட்சி இடமளிக்கவில்லை.

Image result for மம்தா பானர்ஜி

அடுத்ததாக மேற்குவங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக முடியுமெனில் அந்த முழுத் தகுதி மம்தா பானர்ஜிக்கு மட்டுமே உண்டு. அவரின் வளர்ச்சியை நம்பியே மாநிலம் உள்ளது.  அவர் நன்றாக வேலை செய்கிறார் என அவருக்குத் தெரியும். அவரின் நல்ல உடல்நலத்துக்காகவும் முன்னேற்றாத்துக்கவும் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ”என்று அம்மாநில பாஜக தலைவர் ஒருவரே புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU.

author avatar
kavitha

Leave a Comment