மேலும் 15 நகரங்களுக்கு விரிவாகிறது மெட்ரோ ரயில்…!!

நாட்டில் மெட்ரோ ரயில் சேவை மேலும் 15 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மத்திய இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புறத்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரி செய்தியார்களிடம் கூறியதாவது:கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில், மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், நாக்பூர், அகமதாபாத் உள்ளிட்ட மேலும் 15 நகரங்களுக்கு, மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இவற்றில் நாக்பூர், அகமதாபாத், நொய்டா ஆகிய நகரங்களில், அடுத்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெறும்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment