மும்பையில் மீண்டும் கனமழை..!சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

மகாராஸ்டிரா மாநிலத்தில் மீண்டும் மழையின் விஸ்வரூபம் தொடங்கியுள்ளது.

இன்று மும்பையில் உள்ள சியன் காவல் நிலையம் அருகில் காலை முதலே கனமழை பெய்து வருகின்றது.இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

முன்னதாக  இந்தியாவில் அதிக மழைப் பொழிவை தரும் தென்மேற்கு பருவக்காற்று மீண்டும் வலுப்பெற்று வருகிறது என்று தேசிய வானிலை மையம் தெரிவித்தது.

மேலும் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று தேசிய வானிலை மையம் அறிவித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment