முதல் ஓவரிலேயே 2 விக்கெட் கடுமையாக திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 161 ரன் எடுத்தது .குறிப்பாக அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 53 ரன்கள் மொயின் அலி 26 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தவித்து வருகிறது. ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் ஷேன் வாட்சன் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் இழந்தனர். இதன் மூலம் ஒரு ஓவரின் முடிவில் 6 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது சென்னை அணி.

author avatar
Srimahath

Leave a Comment