முதல்வர், துணைமுதல்வர் டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் …!

டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் என தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்  தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது.

 

இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் என தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment