முக்கிய ஆலோசனை ! சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

இந்த அமைப்பில் புதிதாக இணைந்த நாடு என்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், குவின்காடோ நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரஷித் அலிமோவ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.

பின்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, இந்த அமைப்பில் உள்ள நாட்டின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற பூர்வாங்க ஆலோசனை கூட்டத்திலும் மோடி கலந்து கொண்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment