மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற முடிவு..!

மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற முடிவு..!

  • மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • அடுத்த மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலையேற்றம்.
  • மாருதி சுசுகியை அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாகும்.

மாருதி சுசுகி அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாமாகும். வரும் 2020 ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு காரணமாகவே இந்த விலையேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாருதி சுசுகி, ஹூண்டாய் நிறுவனங்களை தொடர்ந்து மகிந்திரா நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதனிடையே நாட்டின் மிகப்பெரிய இருசக்கர நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் வரும் ஜனவரி முதல் அனைத்து மாடல் பைக்குகளின் விலையிலும் ரூ.2,000 அதிகரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube