மதுரை அடுத்தடுத்து கார் மோதி விபத்து..!! அச்சத்தில் பாதசாரிகள்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் உள்ள  நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின…
Image result for விபத்து
 

மதுரை அருகே உள்ள  தோப்பூரைச் சேர்ந்தவர் ஒச்சம்மாள். இவர் புதன்கிழமை காலை தோப்பூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார்.அப்போது
கேரளாவிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற வேகமாக கார் ஒன்று வந்தது. தீடிரென சாலையை கடக்கும் மூதாட்டியை காரை ஓட்டிய  கீர்த்தி பென்டின் என்பவர் எதிர்பாராத விதமாக பார்த்தவுடன், சுதாரித்துக் கொண்டு  வாகனத்தை தீடீரென்று  பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். அப்போது  பின்னால் வந்த ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த கார், கீர்த்திபென்டின் கார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ராஜசேகர் காயமடைந்தார். அப்பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்தில் சிக்கியதைப் பார்த்த மூதாட்டி ஒச்சம்மாள் மயக்கமடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீஸார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவ்விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படாத்தால் பாதசாரிகள் நிம்மதியடைந்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாளுக்கு நாள் விபத்து அதிகரித்துக் கொண்டு இருப்பதால் பொது மக்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது….

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment