மக்கள் நலனை அடிப்படையாக கொண்டதே திமுக தேர்தல் அறிக்கை : பாலகிருஷ்ணன்

மக்கள் நலனை அடிப்படையாக கொண்டதே திமுக தேர்தல் அறிக்கை : பாலகிருஷ்ணன்

  • மக்கள் நலனை அடிப்படையாக கொண்டதே திமுக தேர்தல் அறிக்கை.

மக்களவை தேர்தல் வரும்ஏப்ரல்18-ம்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த தேர்தலின் போது கூறிய தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டவர்கள் மோடி ஆட்சியாளர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கண்டுகொள்ளாதவர்கள் பாஜ ஆட்சியாளர்கள். கஜா புயல் பாதிப்பை பார்வையிட மோடி வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையை எச்.ராஜா குறை சொல்கிறார். அவரை போன்ற அரை வேக்காடு அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்வது கிடையாது. இருப்பினும் சொல்கிறேன். சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா டெபாசிட் இழப்பார். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *