போலி கைடுகளுக்கு இனி சிறை தண்டனை : பழனியில் காவல்துறை எச்சரிக்கை

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணபடுகிறது. இங்கு வரும் வெளியூர் பக்தர்களை சிலர் தாங்கள் கைடு என கூறிக்கொண்டு பழனியை சுற்றிகாட்டுவதாகவும், சாமி தரிசனம் சீக்கிரம் பார்க்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி பணம் பறித்து ஏமாற்றி விடுகின்றனர்.

ஆதலால், அவ்வாறான செயல்களை தடுக்கும் விதமாகவும், அவ்வாறு செய்பவர்களை பிடிக்கும் வகையில் காவல்துறை ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அவ்வாறு ஏமாற்றுபவர்களுக்கு கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும் என கூறினார்.

source :dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment