‘பிளிப்கார்ட்’ தலைமை செயல் அதிகாரி ராஜினாமா…!!

ஆன்–லைன் வர்த்தகத்தில் புகழ் பெற்ற நிறுவனமான பிளிப்கார்ட்டின் தலைமை செயல் அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2007–ம் ஆண்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாக ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இது ஆன்–லைன் வர்த்தகம் என்று சொல்லப்படுகிற இணையவழி வர்த்தகத்தில் புகழ் பெற்றது.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை அமெரிக்க ஆன்–லைன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிற ‘வால்மார்ட்‘ நிறுவனம் வாங்கியது. இந்த நிலையில் திடீரென ‘பிளிப்கார்ட்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து பின்னி பன்சால் விலகி உள்ளார். உடனடியாக அவரது ராஜினாமா அமலுக்கு வந்துள்ளது.

இதுபற்றி வால்மார்ட் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பின்னி பன்சால் மீது தனிப்பட்ட தவறான நடத்தை புகார்கள் எழுந்தன. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் மீதான புகார்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஒட்டுமொத்த விவகாரமும் கவனத்தை சிதறடித்து விடும் என கருதி அவர் விலகி உள்ளார்’’ என கூறப்பட்டுள்ளது.பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment