பிரம்மாண்டமாக அச்சடிக்கப்பட்ட ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் – வைரலாகும் புகைப்படங்கள்..!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரில் ஒருவர் முகேஷ் அம்பானி. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானி.

முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர். ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தா – மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்குள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆகாஷ் அம்பானி-ஸ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்கள் மிகப்பிரம்மாண்டமாய் அச்சடிக்கப்பட்டுள்ளன. வருகின்ற 30-ம் தேதி நிச்சயர்தார்த்தம் நடைபெற உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஒரு அழைப்பிதழ் அச்சிட 1 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்டி வடிவில் உள்ள இந்த அழைப்பிதழில் விநாயகர் சிலை உள்ளது. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழ் பார்ப்போரை கவர்ந்து இழுக்கின்றன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment