பள்ளி மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை …! போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் திருநெல்வேலியில்  உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் , தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி டவுணில் உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை அடுத்து போலீசார் அவரை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி, தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment