பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு-ரூ.36 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை!

கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிக்காக ரூ.36.5 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் ,கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தலுக்காக செப்டம்பர் 21 முதல் ஏப்ரல் 22 வரைக்கான நிதியான ரூ.36.50 கோடியை மாநில நிதி ஆணையத்தின் (SFC) மானியத்தை பயன்படுத்த அனுமதி மற்றும் உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Toilet

மேலும்,காலை மற்றும் மதியம் ஒரு முறை என ஒரு நாளைக்கு இரண்டு முறை கட்டாயமாக பள்ளி கழிப்பறைகள் பராமரிப்பு,வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.