நெல்லையில் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தி ஓவியப் போட்டி

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் சார்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஐந்து வகையான தலைப்புகளில் 1 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஓவியப்போட்டியில் பங்கேற்றனர்.

பாதுகாப்பான உணவு, சத்தான மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு, உணவை வீணாக்காதீர்கள் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் தங்கள் கற்பனைத் திறனை கொண்டு ஓவியங்களை வரைந்தனர். வெற்றி பெற்றவர்களின் ஓவியங்கள் உணவு பாதுகாப்புத்துறை இணையதளத்தில் இடம் பெறும் என்பது குறிப்பிடதக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment