நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது….!!

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காற்றின் சீற்றம் காரணமாக எல்லை தாண்டி சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment