நிபா வைரஸ்: புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – கிரன்பேடி..!!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுவதாகவும், நிபா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாகவும் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரன்பேடி தெரிவித்துள்ளார். கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர்.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிபா வைரஸ் குறித்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துவருவதாகவும், புதுச்சேரிக்கு வரும் கேரள சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுவதாகவும், அனைத்து மருத்துவக்கல்லூரி, பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் பாதிப்பு குறித்து விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment