நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை…சென்னை வானிலை மையம்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இன்று சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்தது. பொன்னேரி, செங்குன்றம், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  மிதமான மழை பெய்தது.
இன்று சென்னை  வானிலைமைய இயக்குனர்  பாலசந்திரன் கூறும் போது   தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி  நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்; கடலோர மாவட்டங்களை தொடர்ந்து உள்மாவட்டங்களில் பருவமழை தொடங்கும் . என கூறி உள்ளார்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment