நாகை அருகே மக்கள் பழுதடைந்த சிமெண்ட் பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை!

பழுதடைந்த சிமெண்ட் பாலத்திற்கு பதிலாக,  நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை எழுந்துள்ளது. தகட்டூர் பைரவர் கோவில் செல்லும் வழியில் முல்லை ஆற்றின் குறுக்கே உள்ள இந்தப் பாலம் 5 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது.

அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான இந்தப் பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நிகழும் முன் பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment