நடத்துனரே இல்லாத பேருந்து …!அப்போம் எப்படி டிக்கெட் எடுக்க ?

சென்னையில் ஜூலை 3 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 515 புதிய பேருந்துகளை தொடக்கி வைத்தார்.

ரூ.134 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன, படுக்கை வசதி கொண்ட 515 புதிய பேருந்துகள் தயாரிக்கபட்டது.இந்த பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.மேலும் சட்டசபையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.

இதேபோல் கோவையில் இருந்து சேலத்திற்கு முதல்கட்டமாக நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.மொத்தம் இந்த வழித்தடத்தில் ஆறு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.ஆனால் இந்த பேருந்துகளில் பேருந்து நிலையத்தில் நடத்துனர் இருப்பார்.இவர் தான் பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்தை வசூலிப்பார்.மேலும் மறு முனையிலும் இதே முறைதான் பின்பற்றப்படுகின்றது.மேலும் இந்த பேருந்துகள் இடை நில்லாப் பேருந்துகள் ஆகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment