தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் அழைப்பு!மாணவர்கள் அருங்காட்சியகங்களை பார்வையிட்டு நிபுணர்களாகலாம்!

தொல்லியல்துறை அமைச்சர்  பாண்டியராஜன்,அருங்காட்சியகங்களை பார்வையிட்டு மாணவர்கள் நிபுணர்களாகுமாறு  அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெளிநாடுகளில் சுற்றுலா செல்வோர் அருங்காட்சியகத்தை தான் முதலில் பார்ப்பார்கள் என்றார்.  மாணவர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது  அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்வதை பாடத்திட்டத்தில் சேர்க்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்  நவீன டிஜிட்டல் முறைகளை  கொண்டு வர உள்ளதாக பாண்டியராஜன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment