தொடர் மழையால் குற்றாலத்தில் மீண்டும் குளிக்க தடை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி  சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

இந்நிலையில்,  நேற்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும். அது குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளதாகவும். மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று  ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இதிலும் குறிப்பாக குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும்  கூறினார்.

இதனை தொடர்ந்து தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment